ஆப்பிரிக்க நாடுகளில் மிக வேகமாகப் பரவி வரும் எபோலா நோய்க்கு முழுவதுமாக மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் ஜப்பான் மருத்துவர்கள் இந்த நோய் பரவாமல் தடுக்கும் வண்ணமும், நோயின் தாக்கம் சீராகக் குறையும் வகையிலும் மருந்துகள் தயாரித்து உள்ளனர். இதனால் உலக சுகாதார மையம் இந்த மருந்துகளை ஆப்பிரிக்க நாடுகளுக்கு அதிக அளவில் அனுப்பி வைக்க கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து ஜப்பானும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு அதிகம் எபோலா நோய் கட்டுப்பாட்டு மருந்துகளை அனுப்ப ஒப்புதல் தெரிவித்துள்ளது.ஆப்பிரிக்க நாடுகளில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எபோலா நோயாளிகள் இறந்துள்ளனர் என்பதுக் குறிப்பிடத் தக்கது.
Post a Comment
0 Comments