பேஸ்புக்கில் லைக் வாங்க நினைத்து கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் இளைஞர்! - விளையாட்டு விபரீதம் ஆனது !!!

பேஸ்புக்கில் லைக் வாங்க நினைத்து கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் இளைஞர்!


பேஸ்புக் மோகமும், அதிக லைக் வாங்க வேண்டும் என்று வேகமும் இளைஞர்களையும், இளைஞிகளையும் படாதபாடு படுத்துகிறது.

பேஸ்புக்கில் அதிக லைக்குகளை வாங்கி சாதனை படைக்க நினைத்த ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அங்குள்ள நேரு உயிரியல் பூங்காவுக்குள் சென்று, அங்கிருந்த 80 வயதான ஆண் ஆமை மீது ஏறி நின்று போட்டோ எடுத்துக் கொண்டார்.

மிகக் கம்பீரமாக ஆமை மீது ஏறி நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றினார். லைக்குகள் குவிந்ததோ இல்லையோ, அவரது வீட்டுக்கு போலிஸ் வந்து குவிந்தது.

விலங்குகளை துன்புறுத்திய குற்றத்துக்காக அவரை பஹதுர்புரா காவல்துறையினர் கைது செய்து சிறையில் தள்ளினர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url