Type Here to Get Search Results !

மூணாறில் நிலச்சரிவிற்கு பலியானோரின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது !!!!



கேரள மாநிலம் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் சோகத்தை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் பெட்டிமடி என்ற இடத்தில் இரு தினங்களுக்கு முன்பு கனமழையால் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இங்கு கண்ண தேவன் எஸ்டேட் நிறுவனத்திற்குச் சொந்தமான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு வீடுகளில் தங்கியிருந்தனர். இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி 25 வீடுகள் மண்ணில் புதைந்தன.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர், உறவினர்களைப் பார்க்க வந்த வெளியூர்க்காரர்கள், குடும்பத்தை பிரிந்து தேயிலைத் தோட்ட வேலை செய்து வந்த தொழிலாளர்கள் என பலரும் சிதைந்த நிலையில் மீட்கப்படுவது காண்போரைக் கண்ணீர் சிந்த வைக்கும் வகையில் உள்ளது.

இதில் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த கோர விபத்தில் தற்போது வரை 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 45 ஆக உய்ர்ந்துள்ளது. மேலும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad