Type Here to Get Search Results !

25 ஆண்டுகளாக ஒரே அறையில் பூட்டப்பட்டிருந்த இளம்பெண், நிர்வாணமாக அடைத்து வைத்து கொடுமை!



பிளான்ச் மோன்னியர் என்பவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு அழகான பெண் ஆவார். அவருடைய வாழ்க்கை மிகவும் மோசமானதாகும். இவர் 1849 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி பிரான்ஸில் உள்ள போய்ட்டியர்ஸில் பிறந்தார். அப்போது பிரான்ஸில் அது ஒரு அற்புதமான குடும்பமாக இருந்தது.

அவரது அழகு, உடல் தோற்றம் மற்றும் நல்ல குணம் காரணமாக அவரால் அனைவரும் ஈர்க்கப்பட்டனர். இதனால் பல பணக்காரர்களும் இவரை திருமணம் செய்ய ஆசைப்பட்டனர்.

அவரது இளமைக்காலங்களில் அவரை திருமணம் செய்ய பல பிரமுகர்கள் பிலான்ச் மோன்னியருக்கு கடிதம் எழுதினர். இதனால் அவரது தாயார் லூயிஸ் மோன்னியர் மிகவும் கோபம் கொண்டார். பிளான்ச் வக்கீல் இளைஞரை காதலித்ததாகவும், அவருக்கு திருமணம் செய்து கொடுக்க விரும்பாத அவரது தாய், ஒரு கட்டத்தில் தன் மகள் என்றும் பாராமல் ஓர் இருட்டு அறையில் பூட்டி அடைத்து வைத்ததாக அறியப்படுகிறது.
தனிமைப்படுத்தப்பட்டார்:

லூயிஸ் மோன்னியர் தனது மகளை ஒரு அறையில் வைத்து பூட்டினார். ஜன்னல்களை கூட கட்டைகளை வைத்து அடித்து திறக்க முடியாதப்படி மூடினார். இதனால் அந்த அறை சூரிய ஒளியே சுத்தமாக இல்லாமல் சுத்தமாக இருட்டாக இருந்தது.

அந்த அறையில் பூட்ட பட்டதன் மூலம் பிளான்ச் மோன்னியரை யாராலும் பார்க்க முடியவில்லை. இதனால் பிளான்ச்க்கு பெற்றோர், சகோதரர் மற்றும் வீட்டை சுற்றியுள்ள ஊழியர்களை தவிர வேறு யாரையும் தெரியாமல் போனது. அவரது உலகமே அவரது வீட்டோடு முடிந்துவிட்டது.

​கொடுமை:

அவள் அறையில் இருந்த படுக்கையில் இருந்து இறங்க கூட அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அவருக்கு அடிப்படை சுதந்திரமான கழிவறை, குளியலறைகளை கூட அவருக்கு அமைத்து தரவில்லை. மிகவும் துயரமான ஒரு வாழ்க்கையை அவர் வாழ்ந்தார்.

தன் வாழ்க்கையின் பாதி நாளில் அவர் தான் சாப்பிட்ட இடத்திலேயே சிறுநீரும் மலமும் கழித்தார். அவரை காணவில்லை என அவர்களது உறவினர்கள் பிளான்ச் மோன்னியரின் பெற்றோர்களிடம் கேட்டுள்ளனர்.

​சாக்குப்போக்கு:

அதற்கு அவர்கள் தனது மகள் லண்டனில் உள்ள போர்டிங் பள்ளிக்கு படிக்க அனுப்பப்பட்டதாகவும். சில காரணங்களால் அவரால் வீட்டிற்கு வர முடியவில்லை எனவும் கூறி வந்துள்ளனர்.

பிறகு சில ஆண்டுகள் கழித்து பிளான்ச் மோன்னியர் ஸ்காட்லாந்தில் தனது சொந்த வாழ்க்கையை உருவாக்கிக்கொண்டதாக அவரது பெற்றோர்கள் கூறினர். பிறகு உறவினர்களும் அவரை பற்றி விசாரிக்கவில்லை.

​சந்தேக கடிதம்:

இந்த சம்பவம் நடந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு 1901 மார்ச் 23 ஆம் தேதி பாரிஸில் உள்ள அட்டர்னி ஜெனரலுக்கு ஒரு கடிதம் வந்தது. யாரோ ஒருவர் ஒரு கடிதத்தில் தனக்கு நன்கு தெரிந்த ஒரு குடும்பம் தனது வீட்டில் ஏதோ ஒன்றை மறைப்பதாகவும் அவர்களின் மூடிய கதவுகளுக்கு பின்னால் ஏதோ மர்மம் இருப்பதாகவும் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதம் எழுதியது யார் என கண்டுப்பிடிக்க முடியவில்லை. ஆனால் அவர் வரலாறு சார்ந்த துறையில் பணிப்புரிபவராக இருக்க வேண்டும் என அனுமானிக்கப்படுகிறது.

பாரீஸ் சமுகத்தில் மோன்னியர் குடும்பம் மிகவும் மதிக்கத்தக்க குடும்பமாக இருந்தது. இதனால் இந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்த கூற்றுகள் குறித்து அதிகாரிகள் தயக்கம் காட்டினர். ஆனால் அந்த கடிதத்தை அப்படியே விட்டு விடவும் அவர்கள் தயாராக இல்லை.

அதிகாரிகள் மோன்னியர் வீட்டை சோதனை செய்ய முடிவெடுத்தனர். அங்கு அனைத்தும் சுத்தமாகவும் சரியாகவும் இருந்தது. ஒரு அறையில் இருந்து துர்நாற்றம் வீசும் வரை அந்த வீட்டில் அவர்கள் எதையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

​அழுகிய வாடை:

அழுகும் வாடை வரும் அந்த அறையை அவர்கள் அடைந்தனர். அந்த அறை கதவின் பூட்டு மிகவும் துருப்பிடித்து இருந்தது. அதன் மூலம் அந்த அறை பல ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருக்க வேண்டும் என அவர்கள் முடிவு செய்தனர்.

பிறகு அதிகாரிகள் அந்த பூட்டை உடைத்து அந்த மர்மமான அறைக்குள் நுழைந்தனர். அங்கு அவர்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பிறகு அவர்கள் தங்கள் கண்டுப்பிடிப்பின் அடிப்படையில் விரிவான ஒரு அறிக்கையை தயார் செய்தனர். அந்த அறிக்கையில் இருந்து ஒரு பகுதி உங்களுக்காக.

நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்ட பிளான்ச்:



“அழுகிய வாடை அடிக்கும் அந்த அறையில் ஒரு பழைய மெத்தையில் நிர்வாணமாக அந்த பெண் கிடந்தார். அவர் மிகவும் ஊட்டசத்து குறைப்பாடு உடையவராக இருந்தார். அவரை சுற்றியுள்ள அனைத்திலும் உணவுகளும் மலமும் கிடந்தன. அவரின் படுக்கைகள் கூட மோசமாக இருப்பதை நாங்கள் கண்டோம். அந்த அறைக்குள் இருந்த காற்று சுவாசிக்கவே முடியாத அளவு துர்நாற்றம் வீசக்கூடியதாக இருந்தது.” என அறிக்கையில் எழுதப்பட்டிருந்தது.

அந்த அறை மிகவும் இருட்டாக இருந்தது. அதிகாரிகள் அந்த அறை ஜன்னலில் போடப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்தனர். இந்த தருணத்தில்தான் 25 ஆண்டுகளுக்கு பிறகு பிளான்ச் சூரிய ஒளியை கண்டார்.

வெறும் 25 கிலோ உடல் எடை

25 ஆண்டுகளாக அவர் சங்கிலியால் கட்டப்பட்டிருந்ததாகவும் உயிர் வாழ்வதற்கான குறைந்தபட்ச உணவுகளை மட்டுமே அவருக்கு வழங்கி வந்ததாகவும் விசாரணையில் அவர் கூறினார்.

25 கிலோ கிராம் மட்டுமே எடையை கொண்ட அவரால் எழுந்து நிற்க கூட முடியவில்லை. அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது நாற்றமடிக்காத காற்றை சுவாசிப்பது மிகவும் அற்புதமாக இருப்பதாக கூறியுள்ளார்.

இத்தனை ஆண்டுகளாக இப்படி ஒரு கொடூரமான நிலையில் இருந்தும் அவர் உயிர் பிழைத்துள்ளது ஆச்சரியமாக உள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

​நீதி வழங்கப்பட்டது

மோனியார் குடும்பத்தை சேர்ந்த அனைவரிடமும் விசாரனை நடத்தப்பட்டது. அங்கு அது முக்கிய வழக்காக நடைப்பெற்றது. அவரின் தாய் லூயிஸ் மோன்னியர் கைது செய்யப்பட்டார்.

ஆனால் சிறைவாசம் அனுபவித்த 15 ஆவது நாளே அவர் இறந்தார். அவர் இதயம் பலவீனமாக இருந்ததால் அவர் இறந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் பலர் அவர் இறப்பதற்காக மருந்து எடுத்துக்கொண்டார் என கூறுகின்றனர்.

இந்த குற்றத்திற்கு தனது தாயாரே காரணம் என கூறி பிளான்சின் சகோதரரான மார்செல் மோன்னியர் தன்னை பாதுக்காத்துக்கொள்ள முயற்சி செய்தார். ஆனால் அவரும் குற்றத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டார். அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

​மர​ணம்!

இப்போது பிளான்ச் சுதந்திரமாக உள்ளார். ஆனால் உலகம் எவ்வளவோ மாறிவிட்டது. அவராலும் அவ்வளவு எளிதாக இந்த வாழ்க்கையை வாழ முடியவில்லை. 25 ஆண்டுகள் வீட்டில் அடைக்கப்பட்டது காரணமாக அவர் மன நல பிரச்சனைகளுக்கு ஆளானார். சுகாதார பிரச்சனைகள் காரணமாக அவர் இவ்வாறு பாதிக்கப்பட்டார்.

இதனால் மன நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிளான்ச் 1913 இல் இறந்தார்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad