Type Here to Get Search Results !

தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மட்டும் மேலும் 434 பேருக்கு கொரோனா; தமிழக மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம் வெளியீடு

தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மட்டும் 434 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது.

தமிழக மாவட்டங்களில் முறையான நடவடிக்கைகளாக கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களால் புதிய பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்தநிலையில் நேற்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழக மாவட்டங்களில் முறையான நடவடிக்கைகளாக கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களால் புதிய பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்தநிலையில் நேற்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 447 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 674 ஆக அதிகரித்தது. இந்த நிலையில், இன்று மேலும் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 10.108 -ஆக அதிகரித்துள்ளது. 
சென்னையில் இன்று ஒருநாளில் மட்டும் 309பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை  5947-ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவால் இன்று மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 71ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து இன்று ஒரே நாளில் 359-பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம், இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2599-பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட வாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு;
தமிழகத்தில் மேலும் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 10,108- ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,003-லிருந்து 81,970-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,549-லிருந்து 2,649-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 26,235-லிருந்து 27,920-ஆக உயர்ந்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 2,599 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 359 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 71-ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 58 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 7,435 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் தலா 100-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 11,672 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 447 பேருக்கு தொற்று உறுதியானது.

* சென்னை மிகவும் நெருக்கமான மாநகரம் என்பதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது.

* தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு இதுவரை மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

* அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 309 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 5,946 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இன்று தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 253 ஆண்கள், 181 பெண்கள் என தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களில் 6,642 ஆண்கள், 3,463 பெண்கள் மற்றும் 3 திருநங்கைகள் என தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10,883 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 447 பேருக்கு தொற்று உறுதியானது.

* கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதை கண்டு அச்சப்பட வேண்டாம் என மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.

* தமிழகத்திற்கு வரும் ரயில் பயணிகளை கண்காணிக்க 400  குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

* கப்பலில் வருவோர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

* இந்தியாவிலேயே தமிழகத்தில் தான், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் விகிதம் மிகக்குறைவாக உள்ளது.

* தமிழகத்தில் கொரோனா அறிகுறியுடன் 5,598 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

* மாலத்தீவிலிருந்து வந்த 6 பேர், மகாராஷ்டிராவில் இருந்து வந்த 40 பேர், குஜராத்தில் இருந்து வந்த 2 பேர், கர்நாடகாவில் இருந்து வந்த ஒருவருக்கு என கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

* செங்கல்பட்டில் 20 பேர்,  திருவள்ளூரில் 21 பேர், தொற்று இல்லாத மாவட்டமாக இருந்த கிருஷ்ணகிரியில் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 359 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் 359 பேர் மீண்ட நிலையில் இதுவரை 2,599 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 71-ஆக உயர்ந்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad