Type Here to Get Search Results !

நாடு முழுவதும் 4-வது ஊரடங்கு குறித்து மே 18-ம் தேதிக்கு முன்பு அறிவிக்கப்படும்; ஊரடங்கு புதிய வடிவில் இருக்கும்: பிரதமர் மோடி

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

நாடு முழுவதும் 4-வது ஊரடங்கு குறித்து மே 18-ம் தேதிக்கு முன்பு அறிவிக்கப்படும்; ஊரடங்கு புதிய வடிவில் இருக்கும்: பிரதமர் மோடி
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிதம் கொரோனாவுக்கு எதிரான போருக்கு ஒதுக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* கொரோனா தொற்றுக்கு எதிராக 4 மாதங்களாக போராடி வருகிறோம்.

* உலகம் முழுவதும் 3 லட்சம் பேர் கொரோனா வைரசுக்கு உயிரிழந்துள்ளது வருத்தம் அளிக்கிறது.

* கொரோனா வைரஸ் உலக நாடுகளை மண்டியிட வைத்துள்ளது.

* இந்திய ஒரு சுயசார்புள்ள நாடு என்பதை நிரூபிக்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் தோற்று விடக்கூடாது.

* கொரோனா வைரஸுக்கு எதிரான போரை தொடர வேண்டியுள்ளது. நம்மை நாமே தற்காத்துக்கொண்டு கொரோனாவிற்கு எதிராக போராட வேண்டியுள்ளது.

* மனித இனத்தால் கற்பனை செய்து பார்க்க முடியாத மிகப் பெரிய பாதிப்பு.

* கொரோனா வைரஸ் முன்னதாக நம் மனித இனம் தோற்றுப் போய்விட்டது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

* கொரோனா பாதிப்பால் இந்தியா ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறது. தற்போதைய நெருக்கடி இந்தியாவிற்கு ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளது.

* உலகம் ஒரே குடும்பம் என்பதை இந்திய கலாச்சாரம் வலியுறுத்தி வருகிறது.

* கொரோனா பாதிப்பின்  தொடக்கத்தில் தடுப்பு உபகரணங்கள் ஒன்று கூட இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை.

* மிக குறைந்த அளவிலான என் 95 முக கவசங்களே இந்தியாவில் இருந்தன. தற்போது 2 லட்சம் கொரோனா தடுப்பு உபகரணங்கள், 2 லட்சம் என் 95 முக கவசங்கள் நாள்தோறும் தயாரிக்கப்படுகின்றன.

* யோகாசனம் இந்தியா உலகிற்கு அளித்த பரிசு ஆகும்.

* கொரோனா விவகாரத்தில் உலகிற்கே இந்தியா ஒரு நம்பிக்கை ஒளியை அளித்துள்ளது.

* 20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார திட்டங்களை பிரதமர் மோடி அறிவிக்கிறார். இத்திட்டம் குறித்த விரிவான விவரங்களை நிதியமைச்சர் அறிவிப்பார். சிறு,குறு நிறுவனங்களுக்கு இந்த திட்டம் உதவும்.

* கொரோனாவிற்கு பின்னர் இந்தியாவை சிறந்த நாடாக உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.

* துணிச்சலான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா தயாராகிறது.

* உள்நாட்டு சந்தையின் முக்கியத்துவத்தை கொரோனா பிரச்னை உணர்த்தியுள்ளது.

* அனைத்து இந்தியர்களும் உள்நாட்டு உற்பத்தி பொருட்களை வாங்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

* கைத்தறியையும் நாம் இந்த சமயத்தில் பிரபலபடுத்தவேண்டும். ஏற்றுமதியை வேகப்படுத்தவேண்டிய நேரமிது.

* கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான 4-ம் கட்ட ஊரடங்கு மாறுபட்டதாக இருக்கும்.

* 4-ம் கட்ட ஊரடங்கு குறித்த விவரங்கள் மே 18-ம் தேதிக்கு முன்பாக வெளியிடப்படும். மாநிலங்களின் பரிந்துரையின் பேரிலேயே 4ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad