Type Here to Get Search Results !

தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மட்டும் மேலும் 72 பேருக்கு கொரோனா; தமிழக மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம் வெளியீடு

தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மட்டும் 72 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1683-ல் இருந்து 1755 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 452- ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1755 ஆக உயர்ந்துள்ளது.   கொரோனா பாதிப்பால்  இன்று மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 22 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 52 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 452 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை  822 ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியா உள்ளிட்ட 209 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை  ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால், மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட வாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு;
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,452-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 4,814 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 723-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 14 நாட்களில் 80 மாவட்டங்களில் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏதும் பதிவாகவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த கொடிய வைரஸ் தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் 114 மீண்ட நிலையில் இதுவரை 866 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 866 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 114 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* கொரோனாவால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 452 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் 25,503 பேர் இதுவரை வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். 19 பேர் அரசு கண்காணிப்பில் உள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 72,403 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று மட்டும் 6,426 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad