Type Here to Get Search Results !

பிக்பாசில் இருந்து வெளியேற விரும்பும் ரைசா மற்றும் வையாபுரி!!!

பிக்பாஸ்  வீட்டில் முதலில் நுழையும்போதே 15 போட்டியாளர்களும் மகிழ்ச்சியுடன் தான் இருந்தார்கள்.பின்னர் ஸ்ரீ வெளியேறினார்.அதன்பின் அனுயா,பரணி,கஞ்சா கருப்பு,ஆர்த்தி,நமீதா என வரிசையாக வெளியேறினர்.

தற்பொழுது ஓவியா ,ரைசா ,காயத்ரி,ஜூலி,ஷக்தி,கணேஷ்,வையாபுரி,ஆரவ்,சினேகன் என 9 போட்டியாளர்கள் வீட்டினுள் உள்ளனர்.இதில் வையாபுரி இரண்டாவது வாரத்தில் இருந்தே வெளியேற வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தார்.இந்நிலையில் இந்த வாரத்தில் ரைசாவும் வெளியேற வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறார்.ரைசா தான் உண்டு தன் மேக்கப் உண்டு எனவும் யார் எது சொன்னாலும் எஸ் எஸ் என்று கூறிக் கொண்டும் இருக்கிறார்.இப்பொழுது  அவர் ஜூலி உடன் சேர்ந்து கொண்டுள்ளார். வேறு யாரிடமும் அதிகமாகப் பேசுவது இல்லை.



கடந்த இரண்டு நாட்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை என ரசிகர்கள் மத்தியில் கமெண்ட்ஸ்கள் வந்து கொண்டு இருக்கிறது.இவ்வளவு நாட்கள் இயல்பாக சென்று கொண்டிருந்த நிகழ்ச்சியில் பல திருப்பங்கள் கொண்டு வர பட்டுள்ளதை நாம் காண முடிகிறது.காயத்ரிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை நம்மால் காண முடிகிறது.இவ்வளவு நாட்கள் ஜாலியாக சுற்றி திரிந்த ஓவியா இப்பொழுது எதற்கு எடுத்தாலும் அழ ஆரம்பித்துவிடுகிறார்.இது தான் விஜய் டிவியின் டிஆர் பி ரேட்டை ஏற்றும் சூழ்ச்சியா ??

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad