சென்னை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகை வரலட்சுமி சரத்குமார் சந்தித்தார்
பெண்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக, நடிகை வரலட்சுமி சரத்குமார் ஒரு கையெழுத்து இயக்கத்தைத் துவக்கினார். மார்ச் மாதம் சென்னையில் சேவ் சக்தி என்ற ஹேஷ்டேக்குடன் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராகத் தனது பிரசாரத்தைத் துவக்கினார். பல நடிகர் நடிகைகள் இந்தக் கையெழுத்து இயக்கத்தில் பங்குபெற்றனர்.
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் துவக்கிவைக்கப்பட்ட இந்த கையெழுத்து இயக்கம்குறித்து, மாநில அரசுக்கு ஒரு மனுவாகக் கொடுக்கவிருப்பதாக நடிகை வரலட்சுமி முன்பு தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தார்
இந்த ‘சேவ் சக்தி’ என்ற இயக்கம்மூலம் அனைவரும் ஒன்றிணைந்து பெண்களின் உரிமைக்காக குரல்கொடுக்க முன்வர வேண்டும் என்றும் அனைவரும் பெண்களுக்கான உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராட வேண்டும்' என்றும் வலியுறுத்துகிறார்.
முதல்வருடனான சதிப்புக்கு பிறகு வரலட்சுமி கூறியதாவது:-
மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.மாவட்டந்தோறும் மகளிர் நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். பெண்கள் பாதிக்கப்பட்ட வழக்குகளில் 6 மாதத்தில் தீர்ப்பு வழங்க வேண்டும். என கூறினார்.
Post a Comment
0 Comments