Type Here to Get Search Results !

காப்பியடித்ததை கட்டுப்படுத்தியதால் பீகார் பிளஸ்-2 தேர்வில் 70 சதவீத மாணவர்கள் தோல்வி



லக்னோ,

பீகார் மாநிலத்தில் பரீட்சை என்றாலே காப்பி அடிப்பது, ஆள் மாறாட்டம் செய்வது சர்வசாதாரணமாக நடந்து வந்தது. கடந்த  2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பள்ளியில்  தேர்வு நடந்த போது நூற்றுக்கணக்கானோர் மாடியில் ஏறி நின்று மாணவர்களுக்கு பிட் எழுதி கொடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்ற டாப் மாணவர்கள் சாதாரண கேள்விக்கு கூட பதில் அளிக்க முடியாமல் திணறிய விஷயம் வெளியே வந்தது. இதனால் அவர்களில் பலருக்கு மறு தேர்வு நடத்திய சம்பவமும் நடந்தது.

எனவே, பள்ளி தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க கடும் விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. இதனால் காப்பி அடிப்பது பெரும்பாலும் தடுக்கப்பட்டது.

இதன் காரணமாக பீகார் மாநில பள்ளி தேர்வு முடிவும் மிக மோசமான நிலையை எட்டி உள்ளது. நேற்று அந்த மாநிலத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

அதில், அறிவியல் பிரிவு மாணவர்களில் 70 சதவீதம் பேரும், கலை பிரிவு மாணவர்களில் 76 சதவீதம் பேரும் தோல்வி அடைந்துள்ளனர். இந்த மாணவர்கள் பெற்ற சராசரி மார்க் 44.66 சத வீதமாக உள்ளது.

கடந்த ஆண்டு தேர்வில் அறிவியல் பிரிவு மாணவர்கள் 67 சதவீதம் பேரும், கலை பிரிவு மாணவர்கள் 80.87 சதவீதம் பேரும் வெற்றி பெற்று இருந்தனர்.

ஆனால், இப்போது மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளனர். பீகார் மாநிலத்தில் இந்த அளவுக்கு தேர்ச்சி விகிதம் குறைந்தது இதுவே முதல் முறையாகும். வணிகவியல் பிரிவில் சிறப்பான தேர்ச்சியை பெற்றுள்ளனர். இதில் 74 சதவீத மாணவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

அரசின் கடுமையான நடவடிக்கையால் தான் தோல்வி ஏற்பட்டதாக கருதி தோல்வி அடைந்த மாணவர்கள்  பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். .

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad