Type Here to Get Search Results !

பழம், காய்கறி, பால், உப்பு, டீ, காபி உட்பட நூறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி இருக்காது



 பால், பழம், காய்கறி உட்பட குறைந்தபட்சம் சுமார் 100 பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என தெரிகிறது.  நாடு முழுவதும் ஒரே வரி விதிப்புக்கு வகை செய்யும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), ஜூலை 1ம் தேதியில் இருந்து அமல்படுத்தப்பட இருக்கிறது. இதில் வரி விதிப்பு 5, 12,18, 28 சதவீதம் என 4 பிரிவாக இருக்கும். எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி விதிப்பது என ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை நடத்தி வருகிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறுகையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இந்த மாதம் 18, 19 தேதிகளில் நடக்கிறது. அப்போது வரி விதிப்புகள் இறுதி செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார். இதன்படி, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நகரில் இன்று துவங்குகிறது. கவுன்சில் கூட்டம் நடைபெறும் இடத்தை சுற்றி ஆயிரம் பேரும், மாநில மற்றும் துறை சார்ந்த பிரதிநிதிகள், அதிகாரிகள் தங்குவதற்கான ஓட்டல்கள் போன்ற இடங்களில் சுமார் 400 பேரும் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்றும் நாளையும் நடக்கும் கூட்டத்தில், வரி விதிப்பு முழுமையாக இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது மத்திய அரசு வரியில் 299 பொருட்களுக்கும், மாநில வரிகளில் 99 பொருட்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. இவற்றில் உப்பு, பழங்கள், காய்கறிகள், முட்டை, டீ, காபி உள்பட பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் அத்தியாவசிய உணவு பொருட்கள் உட்பட சுமார் 100 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என தெரிகிறது. இதுபோல் 60 வகையான சேவைகளுக்கும் விலக்கு அளிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதுமட்டுமின்றி தொழில்துறை தரப்பிலும் வரி விலக்கு அல்லது குறைந்த வரி விதிக்குமாறு கோரிக்கைகள் குவிந்துள்ளனன. இவை அனைத்தும் இந்த இரண்டு நாள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad