Type Here to Get Search Results !

மேற்கிந்திய தீவுகள் அணியை பந்தாடி கெத்து காட்டிய பாகிஸ்தான்




பாகிஸ்தான்- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் (பகல்-இரவு) போட்டி துபாயில் நடந்தது.  இதில் முதலில் பேட்டிங் செய்தது  பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 579 ரன்கள்  குவித்து ’டிக்ளேர்’ செய்தது.  தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 357 ரன்கள்  எடுத்தது.  'பாலோஆன்' வழங்காத பாகிஸ்தான் அணி 222 ரன்கள்  முன்னிலையில் 2வது இன்னிங்சை விளையாடியது.ஆனால் மேற்கிந்திய தீவுகளின் அபார பந்துவீச்சில் அந்த அணி 123 ரன்களில்   சுருண்டது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 346 ரன்கள்  வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.  இந்நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 4வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்திருந்தது.   கடைசி நாள் ஆட்டத்தில் வெற்றிக்கு மேலும் 251ரன்கள்  தேவை என்ற நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை இழக்க ஆரம்பித்தது ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் இருந்த டாரன் பிராவோ சிறப்பாக விளையாடி தனி ஒருவராக தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடினார்.அவர் சிறப்பாக ஆடி தனது 8வது சதத்தை பதிவு செய்தார்.  இந்த நிலையில் பிராவோ 116 ரன்கள்  எடுத்து இருந்த போது யாசிர்ஷா பந்தில் ஆட்டம் இழந்தார்.  இதன் பிறகு வந்தவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மேற்கிந்திய தீவுகள் அணி 109 ஓவர்களில் 289 ரன்களில்  சுருண்டது. இதனால் பாகிஸ்தான் 56 ரன்கள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad