இந்திய கிரிக்கெட் வீரர் கம்பீர், கோஹ்லியுடனான பிரச்சனை குறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து கம்பீர் கூறியதாவது, நானும், கோஹ்லியும் கிரிக்கெட்டை ஆக்ரோஷமாக விளையாடுவோம். இருவரும் தனித்தனியாக அணியை வழிநடத்தும் போது தீவிரமாக செயல்படுவோம். கருத்துகளில் மாறுபட்டாலும் அணியின் வெற்றிக்காக பாடுபடுவோம். இருவருக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எவ்வித பிரச்சனையும் இல்லை. களத்திலும் களத்திற்கு வெளியிலும் நாங்கள் நண்பர்கள் என கூறியுள்ளார். மேலும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கைவிடாத வரை பாகிஸ்தானுடன் எந்த வித நேரடி கிரிக்கெட் போட்டியிலும் விளையாடக்கூடாது. தற்போதைய சூழலில், அவர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது குறித்து சிந்திக்கக்கூட முடியாது. விளையாட்டை விட இந்தியர்களின் உயிரே முக்கியமானது என கூறியுள்ளார்
கோஹ்லியுடன் என்ன பிரச்சனை உண்மையை உடைத்த கம்பீர்
October 20, 2016
0
இந்திய கிரிக்கெட் வீரர் கம்பீர், கோஹ்லியுடனான பிரச்சனை குறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து கம்பீர் கூறியதாவது, நானும், கோஹ்லியும் கிரிக்கெட்டை ஆக்ரோஷமாக விளையாடுவோம். இருவரும் தனித்தனியாக அணியை வழிநடத்தும் போது தீவிரமாக செயல்படுவோம். கருத்துகளில் மாறுபட்டாலும் அணியின் வெற்றிக்காக பாடுபடுவோம். இருவருக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எவ்வித பிரச்சனையும் இல்லை. களத்திலும் களத்திற்கு வெளியிலும் நாங்கள் நண்பர்கள் என கூறியுள்ளார். மேலும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கைவிடாத வரை பாகிஸ்தானுடன் எந்த வித நேரடி கிரிக்கெட் போட்டியிலும் விளையாடக்கூடாது. தற்போதைய சூழலில், அவர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது குறித்து சிந்திக்கக்கூட முடியாது. விளையாட்டை விட இந்தியர்களின் உயிரே முக்கியமானது என கூறியுள்ளார்
Post a Comment
0 Comments