வாழை மரத்தின் பாகங்களான வேர், தண்டு, இலை, பூ, காய், பழம் என அதனுடைய அனைத்து பாகங்களும் மருத்துவத்தில் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வாழைத் தண்டில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.
வாழைத் தண்டின் மருத்துவக் குணங்கள்
* வாழைத் தண்டில் உள்ள நார்ச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துக் காணப்படுகிறது. எனவே இதை தினமும் நம் உணவில் பொறியலாக சாப்பிட்டு வந்தால், நம் உடம்பில் உள்ள கெட்டக் கொழுப்புகளை கரைத்து, உடல் எடையை விரைவில் குறைக்கிறது.
* வாழைத் தண்டில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் நம்முடைய இதயத்தை கெடுக்கும் சோடியத்தின் அளவை குறைத்து, இதயம் தொடர்பான பிரச்சனை, ரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
* வாழைத் தண்டில் உள்ள சத்துக்கள் ரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவை கட்டுப்படுத்துகிறது. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாழைத்தண்டை சேர்த்துக் கொள்வது நல்லது.
* நாம் தினமும் அன்றாட உணவில் இந்த வாழைத் தண்டை சேர்த்துக் கொள்வதால், நம் உடலில் தங்கும் வேண்டாத கழிவுகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றி, உடலை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைக்கிறது.
* வறட்டு இருமல் உள்ளதா, அது இரவு நேரத்தில் தூக்கதை கெடுத்து, தொண்டையை புண்ணாகி வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு வாழைத்தண்டில் சாறு எடுத்து குடித்து வந்தால் இருமல் காணாமல் போய்விடும்.
* தினமும் காலையில் வாழைத் தண்டின் சாறு எடுத்து குடித்து வந்தால், சிறுநீரகத்தில் இருக்கும் கற்கள், சிறுநீரகத் தொற்றுகள் போன்ற சிறுநீரக தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் வராமல் தடுக்கிறது.
* அன்றாட நம் உணவில் வாழைத் தண்டை சேர்த்துக் கொள்வதால், நெஞ்செரித்தல் ஏற்படுவதை தடுத்து, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்து, ரத்தசோகை வராமல் தடுக்கிறது.
Post a Comment
0 Comments