சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வருவதால் ஏராளமானோர்
பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஐரோப்பிய நாடுகளுக்கு
புலம்பெயர்ந்து
வருகின்றனர். இந்த நிலையில், சிரியாவில் இருந்து ஹங்கேரிக்கு சென்ற
அகதிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது பெண் நிருபர் பெட்ரோ லஸ்லா என்பவரால் குழந்தையுடன் இருந்த
ஒசமா அப்துல் என்ற சிரிய அகதி காலை இடறி கீழே விழ வைக்கப்பட்டார்.
இந்த வீடியோ தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பெண் நிருபர் பெட்ரோ லஸ்லாவின் இந்த செயலுக்கு கடும் கண்டங்கள்
எழுந்தன. இதைத் தொடர்ந்து பெட்ரோ லஸ்லாவை பணி நீக்கம் செய்வதாக
அவர் வேலைப்பார்த்த நிறுவனம் அறிவித்தது.
Post a Comment
0 Comments