Type Here to Get Search Results !

பிரமாண்ட இயக்குநரின் "நான் ஈ" -பார்ட் 2


                     
                                                                டோலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் நானி,நடிகை சமந்தா,நடிகர் சுதீப் நடிப்பில் வெளியான நான் ஈ படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியான இப்படம் வசூலிலும் சாதனை படைத்தது. அண்மையில் பாகுபலி படத்தை இயக்கி சூப்பர் டூப்பர் வெற்றி கண்ட ராஜமௌலி பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயாராகிவிட்டார். பாகுபலி 2 படத்திற்கு பின்னர் நடிகர் மகேஷ் பாபு அல்லது நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் படத்தை ராஜமௌலி இயக்குவார் என தகவல் வெளிவந்தது. ஆனால் பாகுபலி 2 படத்திற்கு பின்னர் ராஜமௌலி நான் ஈ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என கூறப்படுகின்றது. இத்தகவலை நடிகர் நானி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நான் ஈ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து நானி  கூறுகையில் ராஜமௌலி பாகுபலி 2 படத்திற்கு பின்னர் நான் ஈ படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் என கூறியுள்ளார். இதற்கான பணிகளும் நடைபெறுவதாகவும் நானி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad